Author: Pulan

  • வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே

    புறநானூறு

    வேட்ட வேந்தனும் வெஞ்சினத் தினனே
    கடவன கழிப்புஇவள் தந்தையும் செய்யான்
    ஒளிறுமுகத்து ஏந்திய வீங்குதொடி மருப்பின்
    களிறும் கடிமரம் சேரா சேர்ந்த
    ஒளிறுவேல் மறவரும் வாய்மூழ்த் தனரே
    இயவரும் அறியாப் பல்லியம் கறங்க
    அன்னோ பெரும்பே துற்றன்று இவ் வருங்கடி மூதூர்
    அறன்இலன் மன்ற தானே விறன்மலை
    வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
    முகைவனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
    தகைவளர்த்து எடுத்த நகையடு
    பகைவளர்த்து இருந்த இப் பண்புஇல் தாயே

    பரணர்

  • ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்

    புறநானூறு

    ஆர்கலி யினனே சோணாட்டு அண்ணல்
    கவிகை மண்ணாள் செல்வ ராயினும்
    வாள்வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்
    வரலதோறு அகம் மலர
    ஈதல் ஆனா இலங்குதொடித் தடக்கைப்
    பாரி பறம்பின் பனிச்சுனை போலக்
    காண்டற்கு அரியளாகி மாண்ட
    பெண்மை நிறைந்த பொலிவொடு மண்ணிய
    துகில்விரி கடுப்ப நுடங்கித் தண்ணென
    அகிலார் நறும்புகை ஐதுசென்று அடங்கிய
    கபில நெடுநகர்க் கமழும் நாற்றமொடு
    மனைச்செறிந் தனளே வாணுதல் இனியே
    அற்றன் றாகலின் தெற்றெனப் போற்றிக்
    காய்நெல் கவளம் தீற்றிக் காவுதொறும்
    கடுங்கண் யானை காப்பனர் அன்றி
    வருத லானார் வேந்தர் தன்னையர்
    பொருசமம் கடந்த உருகெழு நெடுவேல்
    குருதி பற்றிய வெருவரு தலையர்
    மற்றுஇவர் மறனும் இற்றால் தெற்றென
    யாரா குவர்கொல் தாமே நேரிழை
    உருத்த பல்சுணங்கு அணிந்த
    மருப்புஇள வனமுலை ஞெமுக்கு வோரே

    கபிலர்

  • ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்

    புறநானூறு

    ஏர் பரந்த வயல் நீர் பரந்த செறுவின்
    நெல் மலிந்த மனைப் பொன் மலிந்த மறுகின்
    படுவண்டு ஆர்க்கும் பன்மலர்க் காவின்
    நெடுவேள் ஆதன் போந்தை அன்ன
    பெருஞ்சீர் அருங்கொண் டியளே கருஞ்சினை
    வேம்பும் ஆரும் போந்தையும் மூன்றும்
    மலைந்த சென்னியர் அணிந்த வில்லர்
    கொற்ற வேந்தர் தரினும் தன்தக
    வணங்கார்க்கு ஈகுவன் அல்லன் வண் தோட்டுப்
    பிணங்கு கதிர்க் கழனி நாப்பண் ஏமுற்று
    உணங்குகலன் ஆழியின் தோன்றும்
    ஓர்எயில் மன்னன் ஒருமட மகளே

    குன்றூர் கிழார் மகனார்

  • வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு

    புறநானூறு

    வேந்துகுறை யுறவுங் கொடாஅன் ஏந்துகோட்டு
    அம்பூந் தொடலை அணித்தழை அல்குல்
    செம்பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை
    எழுவிட்டு அமைத்த திண்நிலைக் கதவின்
    அனரமண் இஞ்சி நாட்கொடி நுடங்கும்
    ________________________________________________
    புலிக்கணத் தன்ன கடுங்கண் சுற்றமொடு
    மாற்றம் மாறான் மறலிய சினத்தன்
    பூக்கோள் என ஏஎய்க் கயம்புக் கனனே
    விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல்லியல்
    சுணங்கணி வனமுலை அவளடு நாளை
    மணம்புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
    ஆரமர் உழக்கிய மறம்கிளர் முன்பின்
    நீள்இலை எஃகம் மறுத்த உடம்பொடு
    வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
    படைதொட் டனனே குருசில் ஆயிடைக்
    களிறுபொரக் கலங்கிய தண்கயம் போலப்
    பெருங்கவின் இழப்பது கொல்லோ
    மென்புனல் வைப்பின்இத் தண்பணை ஊரே

    பரணர்

  • அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்

    புறநானூறு

    அணித்தழை நுடங்க ஓடி மணிப்பொறிக்
    குரலம் குன்றி கொள்ளும் இளையோள்
    மாமகள் __________________
    ________லென வினவுதி கேள் நீ
    எடுப்பவெ ________________
    ___________________ மைந்தர் தந்தை
    இரும்பனை அன்ன பெருங்கை யானை
    கரந்தையஞ் செறுவின் பெயர்க்கும்
    பெருந்தகை மன்னர்க்கு வரைந்திருந் தன்னே

  • வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு

    புறநானூறு

    வியன்புலம் படர்ந்த பல்ஆ நெடுஏறு
    மடலை மாண்நிழல் அசைவிடக் கோவலர்
    வீததை முல்லைப் பூப்பறிக் குந்து
    குறுங்கோல் எறிந்த நெடுஞ்செவிக் குறுமுயல்
    நெடுநீர்ப் பரப்பின் வாளையடு உகளுந்து
    தொடலை அல்குல் தொடித்தோள் மகளிர்
    கடல் ஆடிக் கயம் பாய்ந்து
    கழி நெய்தற் பூக் குறூஉந்து
    பைந்தழை துயல்வருஞ் செறுவிறற்
    _______________________________ லத்தி
    வளர வேண்டும் அவளே என்றும்
    ஆரமர் உழப்பதும் அமரிய ளாகி
    முறஞ்செவி யானை வேந்தர்
    மறங்கெழு நெஞ்சங் கொண்டொளித் தோளே

  • அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா

    புறநானூறு

    அரைசுதலை வரினும் அடங்கல் ஆனா
    நிரைகாழ் எஃகம் நீரின் மூழ்கப்
    புரையோர் சேர்ந்தெனத் தந்தையும் பெயர்க்கும்
    வயல்அமர் கழனி வாயிற் பொய்கைக்
    கயலார் நாரை உகைத்த வாளை
    புனலாடு மகளிர் வளமனை ஒய்யும்
    ஊர்கவின் இழப்பவும் வருவது கொல்லோ
    சுணங்கு அணிந்து எழிலிய அணந்துஏந்து இளமுலை
    வீங்குஇறைப் பணைத்தோள் மடந்தை
    மான்பிணை யன்ன மகிழ்மட நோக்கே

    பரணர்

  • களரி பரந்து கள்ளி போகிப்

    புறநானூறு

    களரி பரந்து கள்ளி போகிப்
    பகலும் கூஉம் கூகையடு பிறழ்பல்
    ஈம விளக்கின் பேஎய் மகளிரொடு
    அஞ்சுவந் தன்று இம் மஞ்சுபடு முதுகாடு
    நெஞ்சமர் காதலர் அழுத கண்ணீர்
    என்புபடு சுடலை வெண்ணீறு அவிப்ப
    எல்லார் புறனும் தான்கண்டு உலகத்து
    மன்பதைக் கெல்லாம் தானாய்த்
    தன்புறம் காண்போர்க் காண்புஅறி யாதே

    தாயங்கண்ணனார்

  • குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்

    புறநானூறு

    குன்று மணந்த மலைபிணித் தியாத்தமண்
    பொதுமை சுட்டிய மூவர் உலகமும்
    பொதுமை இன்றி ஆண்டிசி னோர்க்கும்
    மாண்ட வன்றே ஆண்டுகள் துணையே
    வைத்த தன்றே வெறுக்கை
    _____________________________________ணை
    புணைகை விட்டோர்க்கு அரிதே துணைஅழத்
    தொக்குஉயிர் வெளவுங் காலை
    இக்கரை நின்று இவர்ந்து உக்கரை கொளலே

    பிரமனார்

  • பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்

    புறநானூறு

    பருதி சூழ்ந்தஇப் பயங்கெழு மாநிலம்
    ஒருபகல் எழுவர் எய்தி யற்றே
    வையமும் தவமும் தூக்கின் தவத்துக்கு
    ஐயவி யனைத்தும் ஆற்றாது ஆகலின்
    கைவிட் டனரே காதலர் அதனால்
    விட்டோரை விடாஅள் திருவே
    விடாஅ தோர்இவள் விடப்பட் டோரே

    வான்மீகியார்