Author: Pulan

  • பனி பழுநிய பல் யாமத்துப்

    புறநானூறு

    பனி பழுநிய பல் யாமத்துப்
    பாறு தலை மயிர் நனைய
    இனிது துஞ்சும் திருநகர் வரைப்பின்
    இனையல் அகற்ற என் கிணைதொடாக் குறுகி
    அவி உணவினோர் புறங் காப்ப
    அற நெஞ்சத்தோன் வாழ நாள் என்று
    அதற் கொண்டு வரல் ஏத்திக்
    கரவு இல்லாக் கவிவண் கையான்
    வாழ்க எனப் பெயர் பெற்றோர்
    பிறர்க்கு உவமம் பிறர் இல் என
    அது நினைத்து மதி மழுகி
    அங்கு நின்ற எற் காணூஉச்
    சேய் நாட்டுச் செல் கிணைஞனை
    நீபுரவலை எமக்கு என்ன
    மலைபயந்த மணியும் கடறுபயந்த பொன்னும்
    கடல் பயந்த கதிர் முத்தமும்
    வேறுபட்ட உடையும் சேறுபட்ட தசும்பும்
    கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
    நனவின் நல்கியோன் நகைசால் தோன்றல்
    நாடுஎன மொழிவோர் அவன் நாடென மொழிவோர்
    வேந்தென மொழிவோர் அவன் வேந்தென மொழிவோர்
    __________ பொற்கோட்டு யானையர்
    கவர் பரிக் கச்சை நன்மான்
    வடி மணி வாங்கு உருள
    __________ நல்தேர்க் குழுவினர்
    கத ழிசை வன்க ணினர்
    வாளின் வாழ்நர் ஆர்வமொடு ஈண்டிக்
    கடல் ஒலி கொண்ட தானை
    அடல்வெங் குருசில் மன்னிய நெடிதே

    உலோச்சனார்

  • தென் பரதவர் மிடல் சாய

    புறநானூறு

    தென் பரதவர் மிடல் சாய
    வட வடுகர் வாள் ஓட்டிய
    தொடையமை கண்ணித் திருந்துவேல் தடக்கைக்
    கடுமா கடை இய விடுபரி வடிம்பின்
    நற்றார்க் கள்ளின் சோழன் கோயில்
    புதுப்பிறை யன்ன சுதைசெய் மாடத்துப்
    பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்று என்
    அரிக்கூடு மாக்கிணை இரிய ஒற்றி
    எஞ்சா மரபின் வஞ்சி பாட
    எமக்கென வகுத்த அல்ல மிகப்பல
    மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை
    தாங்காது பொழிதந் தோனே அது கண்டு
    இலம்பாடு உழந்தஎன் இரும்பேர் ஒக்கல்
    விரல்செறி மரபின செவித்தொடக் குநரும்
    செவித்தொடர் மரபின விரற்செறிக் குநரும்
    அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும்
    கடுந்தெறல் இராமன் உடன்புணர் சீதையை
    வலித்தகை அரக்கன் வெளவிய ஞான்றை
    நிலஞ்சேர் மதர் அணி கண்ட குரங்கின்
    செம்முகப் பெருங்கிளை இழைப்பொலிந் தா அங்கு
    அறாஅ அருநகை இனிதுபெற் றிகுமே
    இருங்குளைத் தலைமை எய்தி
    அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே

    ஊன்பொதி பசுங்குடையார்

  • யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை

    புறநானூறு

    யானே பெறுக அவன் தாள்நிழல் வாழ்க்கை
    அவனே பெறுக என் நாஇசை நுவறல்
    நெல்லரி தொழுவர் கூர்வாள் மழுங்கின்
    பின்னை மறத்தோடு அரியக் கல்செத்து
    அள்ளல் யாமைக் கூன்புறத்து உரிஞ்சும்
    நெல்லமல் புரவின் இலங்கை கிழவோன்
    வில்லி யாதன் கிணையேம் பெரும
    குறுந்தாள் ஏற்றைக் கொளுங்கண் அவ்விளர்
    நறுநெய் உருக்கி நாட்சோறு ஈயா
    வல்லன் எந்தை பசிதீர்த்தல் எனக்
    கொன்வரல் வாழ்க்கைநின் கிணைவன் கூறக்
    கேட்டதற் கொண்டும் வேட்கை தண்டாது
    விண்தோய் தலைய குன்றம் பிற்பட
    ____________________ரவந்தனென் யானே
    தாயில் தூவாக் குழவிபோல ஆங்கு அத்
    திருவுடைத் திருமனை ஐதுதோன்று கமழ்புகை
    வருமழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
    குறும்படு குண்டகழ் நீள்மதில் ஊரே

    புறத்திணை நன்னாகனார்

  • தென் பவ்வத்து முத்துப் பூண்டு

    புறநானூறு

    தென் பவ்வத்து முத்துப் பூண்டு
    வட குன்றத்துச் சாந்தம் உரீ இ
    _____________ங்கடல் தானை
    இன்னிசைய விறல் வென்றித்
    தென் னவர் வய மறவன்
    மிசைப் பெய்தநீர் கடல்பரந்து முத்தாகுந்து
    நாறிதழ்க் குளவியடு கூதளம் குழைய
    தேறுபெ________________த்துந்து
    தீஞ்சுளைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
    துப்புஎதிர்ந் தோர்க்கே உள்ளாச் சேய்மையன்
    நட்புஎதிர்ந் தோர்க்கே அங்கை நண்மையன்
    வல்வேல் கந்தன் நல்லிசை யல்ல
    ___________த்தார்ப் பிள்ளையஞ் சிறாஅர்
    அன்னன் ஆகன் மாறே இந்நிலம்
    இலம்படு காலை ஆயினும்
    புலம்பல்போ யின்று பூத்தஎன் கடும்பே

  • ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்

    புறநானூறு

    ஊனும் ஊணும் முனையின் இனிதெனப்
    பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும்
    அளவுபு கலந்து மெல்லிது பருகி
    விருந்து உறுத்து ஆற்ற இருந்தென மாகச்
    சென்மோ பெரும எம் விழவுடை நாட்டு என
    யாம்தன் அறியுநமாகத் தான் பெரிது
    அன்புடை மையின் எம்பிரிவு அஞ்சித்
    துணரியது கொளாஅ வாகிப் பழம்ஊழ்த்துப்
    பயம்பகர் வறியா மயங்கரில் முதுபாழ்ப்
    பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண்
    ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச்
    சிதாஅர் வள்பின் சிதர்ப்புறத் தடாரி
    ஊன்சுகிர் வலந்த தெண்கண் ஒற்றி
    விரல்விசை தவிர்க்கும் அரலையில் பாணியின்
    இலம்பாடு அகற்றல் யாவது புலம்பொடு
    தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம் அதனால்
    இருநிலம் கூலம் பாறக் கோடை
    வருமழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றைச்
    சேயை யாயினும் இவணை யாயினும்
    இதற்கொண்டு அறிநை வாழியோ கிணைவ
    சிறுநனி ஒருவழிப் படர்க என் றோனே எந்தை
    ஒலிவெள் அருவி வேங்கட நாடன்
    உறுவரும் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும்
    அறத்துறை அம்பியின் மான மறப்பின்று
    இருங்கோள் ஈராப் பூட்கைக்
    கரும்பன் ஊரன் காதல் மகனே

  • கடல் படை அடல் கொண்டி

    புறநானூறு

    கடல் படை அடல் கொண்டி
    மண் டுற்ற மலிர் நோன்றாள்
    தண் சோழ நாட்டுப் பொருநன்
    அலங்கு உளை அணி இவுளி
    நலங் கிள்ளி நசைப் பொருநரேம்
    பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்
    அவற் பாடுதும் அவன் தாள் வாழிய என
    நெய் குய்ய ஊன் நவின்ற
    பல்சோற்றான் இன் சுவைய
    நல் குரவின் பசித் துன்பின் நின்
    முன்நாள் விட்ட மூதறி சிறா அரும்
    யானும் ஏழ்மணி யங்கேள் அணிஉத்திக்
    கட்கேள்விக் சுவை நாவின்
    நிறன் உற்ற அரா அப் போலும்
    வறன் ஒரீ இ வழங்கு வாய்ப்ப
    விடுமதி அத்தை கடுமான் தோன்றல்
    நினதே முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு அறிய
    எனதே கிடைக்காழ் அன்ன தெண்கண் மாக்கிணை
    கண்ணகத்து யாத்த நுண் அரிச் சிறுகோல்
    எறிதொறும் நுடங்கி யாங்கு நின் பகைஞர்
    கேட்டொறும் நடுங்க ஏத்துவென்
    வென்ற தேர் பிறர் வேத்தவை யானே

    கோவூர் கிழார்

  • அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்

    புறநானூறு

    அடுமகள் முகந்த அளவா வெண்ணெல்
    தொடிமாண் உலக்கைப் பருஉக்குற் றரிசி
    காடி வெள்ளுலைக் கொளீஇ நீழல்
    ஓங்குசினை மாவின் தீங்கனி நறும்புளி
    மோட்டிவரு வராஅல் கோட்டுமீன் கொழுங்குறை
    செறுவின் வள்ளை சிறுகொடிப் பாகல்
    பாதிரி யூழ்முகை அவிழ்விடுத் தன்ன
    மெய்களைந்து இன்னொடு விரைஇ
    மூழ்ப்பப் பெய்த முழுஅவிழ்ப் புழுக்கல்
    அழிகளிற் படுநர் களியட வைகின்
    பழஞ்சோறு அயிலும் முழங்குநீர்ப் படப்பைக்
    காவிரிக் கிழவன் மாயா நல்லிசைக்
    கிள்ளி வளவன் உள்ளி அவன்படர்தும்
    செல்லேன் செல்லேன் பிறர்முகம் நோக்கேன்
    நெடுங்கழைத் தூண்டில் விடுமீன் நொடுத்துக்
    கிணைமகள் அட்ட பாவற் புளிங்கூழ்
    பொழுதுமறுத் துண்ணும் உண்டியேன் அழிவுகொண்டு
    ஒருசிறை இருந்தேன் என்னே இனியே
    அறவர் அறவன் மறவர் மறவன்
    மள்ளர் மள்ளன்தொல்லோர் மருகன்
    இசையிற் கொண்டான் நசையமுது உண்க என
    மீப்படர்ந்து இறந்து வன்கோல் மண்ணி
    வள்பரிந்து கிடந்தஎன் தெண்கண் மாக்கிணை
    விசிப்புறுத்து அமைந்த புதுக்காழ்ப் போர்வை
    அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்துக்
    கடியும் உணவென்ன கடவுட்கும் தொடேன்
    கடுந்தேர் அள்ளற்கு அசாவா நோன்சுவல்
    பகடே அத்தை யான் வேண்டிவந் தது என
    ஒன்றியான் பெட்டா அளவை அன்றே
    ஆன்று விட்டனன் அத்தை விசும்பின்
    மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை
    ஊர்தியடு நல்கி யோனே சீர்கொள
    இழுமென இழிதரும் அருவி
    வான்தோய் உயர்சிமைத் தோன்றிக் கோவே

    ஐயூற் முடவனார்

  • மாசு விசும்பின் வெண் திங்கள்

    புறநானூறு

    மாசு விசும்பின் வெண் திங்கள்
    மூ வைந்தான் முறை முற்றக்
    கடல் நடுவண் கண்டன்ன என்
    இயம் இசையா மரபு ஏத்திக்
    கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
    பலர் துஞ்சவும் தான் துஞ்சான்
    உலகு காக்கும் உயர் கொள்கை
    கேட்டோன் எந்தை என் தெண்கிணைக் குரலே
    கேட்டற் கொண்டும் வேட்கை தண்டாது
    தொன்றுபடு சிதாஅர் மருங்கு நீக்கி
    மிகப் பெருஞ் சிறப்பின் வீறுசால் நன்கலம்
    _____________________________லவான
    கலிங்கம் அளித்திட்டு என்அரை நோக்கி
    நாரரி நறவின் நாள்மகிழ் தூங்குந்து
    போ தறியேன் பதிப் பழகவும்
    தன்பகை கடிதல் அன்றியும் சேர்ந்தோர்
    பசிப்பகை கடிதலும் வல்லன் மாதோ
    மறவர் மலிந்ததன் ________________
    கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து
    இருங்கழி இழிதரும் ஆர்கலி வங்கம்
    தேறுநீர்ப் பரப்பின் யாறுசீத்து உய்த்துத்
    துறைதொறும் பிணிக்கும் நல்லூர்
    உறைவின் யாணர் நாடுகிழ வோனே

    கோவூர் கிழார்

  • சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி

    புறநானூறு

    சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி
    தடவுவாய்க் கலித்த மாஇதழ்க் குவளை
    வண்டுபடு புதுமலர்த் தண் சிதர் கலாவப்
    பெய்யினும் பெய்யா தாயினும் அருவி
    கொள்ளுழு வியன்புலத்து உழைகால் ஆட
    மால்புஉடை நெடுவரைக் கோடுதொறு இழிதரும்
    நீரினும் இனிய சாயல்
    பாரி வேள்பால் பாடினை செலினே

    கபிலர்

  • பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப

    புறநானூறு

    பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப
    விண்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்
    கிழவன் சேட்புலம் படரின் இழை அணிந்து
    புன்தலை மடப்பிடி பரிசிலாகப்
    பெண்டிரும் தம்பதம் கொடுக்கும் வண்புகழ்க்
    கண்டீ ரக்கோன் ஆகலின் நன்றும்
    முயங்கல் ஆன்றிசின் யானே பொலந்தேர்
    நன்னன் மருகன் அன்றியும் நீயும்
    முயங்கற்கு ஒத்தனை மன்னே வயங்கு மொழிப்
    பாடுநர்க்கு அடைத்த கதவின் ஆடு மழை
    அணங்குசால் அடுக்கம் பொழியும் நும்
    மணங்கமழ் மால்வரை வரைந்தனர் எமரே

    பெருந்தலைச் சாத்தனார்