Category: புறநானூறு

  • இரங்கு முரசின் இனம் சால் யானை

    புறநானூறு

    இரங்கு முரசின் இனம் சால் யானை
    முந்நீர் ஏணி விறல்கெழு மூவரை
    இன்னும் ஓர் யான் அவாஅறி யேனே
    நீயே முன்யான் அரியு மோனே துவன்றிய
    கயத்திட்ட வித்து வறத்திற் சாவாது
    கழைக் கரும்பின் ஒலிக்குந்து
    கொண்டல் கொண்டநீர் கோடை காயினும்
    கண் ணன்ன மலர்பூக் குந்து
    கருங்கால் வேங்கை மலரின் நாளும்
    பொன் னன்ன வீ சுமந்து
    மணி யன்ன நீர் கடற் படரும்
    செவ்வரைப் படப்பை நாஞ்சிற் பொருந
    சிறுவெள் ளருவிப் பெருங்கல் நாடனை
    நீவா ழியர் நின் தந்தை
    தாய்வா ழியர் நிற் பயந்திசி னோரே

    ஒருசிறைப் பெரியனார்

  • யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப

    புறநானூறு

    யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
    இழை வலந்த பஃறுன்னத்து
    இடைப் புரைபற்றிப் பிணி விடாஅ
    ஈர்க் குழாத்தொடு இறை கூர்ந்த
    பேஎன் பகையென ஒன்று என்கோ
    உண்ணா மையின் ஊன் வாடித்
    தெண் ணீரின் கண் மல்கிக்
    கசிவுற்ற என் பல் கிளையடு
    பசி அலைக்கும் பகைஒன் றென்கோ
    அன்ன தன்மையும் அறிந்து ஈயார்
    நின்னது தா என நிலை தளர
    மரம் பிறங்கிய நளிச் சிலம்பின்
    குரங் கன்ன புன்குறுங் கூளியர்
    பரந் தலைக்கும் பகைஒன் றென்கோ
    ஆஅங்கு எனைப் பகையும் அறியுநன் ஆய்
    எனக் கருதிப் பெயர் ஏத்தி
    வா யாரநின் இசை நம்பிச்
    சுடர் சுட்ட சுரத்து ஏறி
    இவண் வந்த பெரு நசையேம்
    எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்
    பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப வென
    அனைத் துரைத்தனன் யான்ஆக
    நினக்கு ஒத்தது நீ நாடி
    நல்கினை விடுமதி பரிசில் அல்கலும்
    தண்புனல் வாயில் துறையூர் முன்றுறை
    நுண்பல மணலினும் ஏத்தி
    உண்குவம் பெரும நீ நல்கிய வளனே

    துறையூர் ஓடை கிழார்

  • கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை

    புறநானூறு

    கொடுவரி வழங்கும் கோடுயர் நெடுவரை
    அருளிடர்ச் சிறுநெறி ஏறலின் வருந்தித்
    தடவரல் கொண்ட தகைமெல் ஒதுக்கின்
    வளைக்கை விறலியென் பின்னள் ஆகப்
    பொன்வார்ந் தன்ன புரிஅடங்கு நரம்பின்
    வரிநவில் பனுவல் புலம்பெயர்ந்து இசைப்பப்
    படுமலை நின்ற பயங்கெழு சீறியாழ்
    ஒல்கல் உள்ளமொடு ஒருபுடைத் தழீஇப்
    புகழ்சால் சிறப்பின்நின் நல்லிசை உள்ளி
    வந்தெனன் எந்தை யானே யென்றும்
    மன்றுபடு பரிசிலர்க் காணின் கன்றொடு
    கறையடி யானை இரியல் போக்கும்
    மலைகெழு நாடன் மாவேள் ஆஅய்
    களிறும் அன்றே மாவும் அன்றே
    ஒளிறுபடைப் புரவிய தேரும் அன்றே
    பாணர் படுநர்பரிசிலர் ஆங்கவர்
    தமதெனத் தொடுக்குவர் ஆயின் எமதெனப்
    பற்றல் தேற்றாப் பயங்கெழு தாயமொடு
    அன்ன வாக நின் ஊழி நின்னைக்
    காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
    உறுமுரண் கடந்த ஆற்றல்
    பொதுமீக் கூற்றத்து நாடுகிழ வோயே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்

    புறநானூறு

    இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
    அறவிலை வணிகன் ஆ அய் அல்லன்
    பிறரும் சான்றோர் சென்ற நெறியென
    ஆங்குப் பட்டன்று அவன் கைவண் மையே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே

    புறநானூறு

    முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
    ஆழ்க என் உள்ளம் போழ்க என் நாவே
    பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க என் செவியே
    நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
    குவளைப் பைஞ்சுனை பருகி அயல
    தகரத் தண்ணிழல் பிணையடு வதியும்
    வடதிசை யதுவே வான்தோய் இமையம்
    தென்திசை ஆஅய் குடி இன்றாயின்
    பிறழ்வது மன்னோ இம் மலர்தலை உலகே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்

    புறநானூறு

    மழைக் கணஞ் சேக்கும் மாமலைக் கிழவன்
    வழைப் பூங் கண்ணி வாய்வாள் அண்டிரன்
    குன்றம் பாடின கொல்லோ
    களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு

    புறநானூறு

    விளங்குமணிக் கொடும்பூண் ஆஅய் நின்னாட்டு
    இளம்பிடி ஒருசூல் பத்து ஈனும்மோ
    நின்னும் நின் மலையும் பாடி வருநர்க்கு
    இன்முகம் கரவாது உவந்து நீ அளித்த
    அண்ணல் யானை எண்ணின் கொங்கர்க்
    குடகடல் ஓட்டிய ஞான்றைத்
    தலைப்பெயர்த் திட்ட வேலினும் பலவே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்

    புறநானூறு

    குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
    வாங்குஅமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து
    வேங்கை முன்றில் குரவை அயரும்
    தீஞ்சுளைப் பலவின் மாமலைக் கிழவன்
    ஆஅய் அண்டிரன் அடுபோர் அண்ணல்
    இரவலர்க்கு ஈத்த யானையின் கரவின்று
    வானம் மீன்பல பூப்பின் ஆனாது
    ஒருவழிக் கருவழி யின்றிப்
    பெருவெள் ளென்னிற் பிழையாது மன்னே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • மன்றப் பலவின் மாச்சினை மந்தி

    புறநானூறு

    மன்றப் பலவின் மாச்சினை மந்தி
    இரவலர் நாற்றிய விசிகூடு முழவின்
    பாடின் தெண்கண் கனி செத்து அடிப்பின்
    அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்
    கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
    ஆடு மகள் குறுகின் அல்லது
    பீடுகெழு மன்னர் குறுகலோ அரிதே

    உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

  • அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்

    புறநானூறு

    அருவி ஆர்க்குங் கழைபயில் நனந்தலைக்
    கறிவளர் அடுக்கத்து மலரந்த காந்தள்
    கொழுங்கிழங்கு மிளிரக் கிண்டிக் கிளையடு
    கடுங்கண் கேழல் உழுத பூழி
    நன்னாள் வருபதம் நோக்கிக் குறவர்
    உழாஅது வித்திய பரூஉக்குரற் சிறுதினை
    முந்துவிளை யாணர் நாள்புதிது உண்மார்
    மரையான் கறந்த நுரைகொள் தீம்பால்
    மான்தடி புழுக்கிய புலவுநாறு குழிசி
    வான்கேழ் இரும்புடை கழாஅது ஏற்றிச்
    சாந்த விறகின் உவித்த புன்கம்
    கூதளங் கவினிய குளவி முன்றில்
    செழுங்கோள் வாழை அகல்இலைப் பகுக்கும்
    ஊராக் குதிரைக் கிழவ கூர்வேல்
    நறைநார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி
    வடிநவில் அம்பின் வில்லோர் பெரும
    கைவள் ஈகைக் கடுமான் கொற்ற
    வையக வரைப்பில் தமிழகம் கேட்பப்
    பொய்யாச் செந்நா நெளிய ஏத்திப்
    பாடுப என்ப பரிசிலர் நாளும்
    ஈயா மன்னர் நாண
    வீயாது பரந்தநின் வசையில் வான் புகழே

    கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்