Tag: புறம்

  • பருத்தி வேலிச் சீறூர் மன்னன்

    புறநானூறு

    பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
    உழுத்துஅதர் உண்ட ஓய்நடைப் புரவி
    கடல்மண்டு தோணியின் படைமுகம் போழ
    நெய்ம்மிதி அருந்திய கொய்சுவல் எருத்தின்
    தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்
    கலம்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே

    பொன் முடியார்

  • உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்

    புறநானூறு

    உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்
    கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
    மடவர் மகிழ்துணை நெடுமான் அஞ்சி
    இல்லிறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
    தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றதன்
    கான்றுபடு கனைஎரி போலத்
    தோன்றவும் வல்லன் தான் தோன்றுங்

    ஔவையார்

  • எமக்கே கலங்கல் தருமே தானே

    புறநானூறு

    எமக்கே கலங்கல் தருமே தானே
    தேறல் உண்ணும் மன்னே நன்றும்
    இன்னான் மன்ற வேந்தே இனியே
    நேரார் ஆரெயில் முற்றி
    வாய் மடித்து உரறி நீ முந்து என்னானே

  • மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்

    புறநானூறு

    மனைக்கு விளக்காகிய வாள்நுதல் கணவன்
    முனைக்கு வரம்பாகிய வென்வேல் நெடுந்தகை
    நடுகல் பிறங்கிய உவல்இடு பறந்தலைப்
    புன்காழ் நெல்லி வன்புலச் சீறூர்க்
    குடியும் மன்னுந் தானே கொடியெடுத்து
    நிறையழிந்து எழுதரு தானைக்குச்
    சிறையும் தானே தன் இறைவிழு முறினே

    ஐயூர் முடவனார்

  • பெருநீர் மேவல் தண்ணடை எருமை

    புறநானூறு

    பெருநீர் மேவல் தண்ணடை எருமை
    இருமருப்பு உறழும் நெடுமாண் நெற்றின்
    பைம்பயறு உதிர்த்த கோதின் கோல்அணைக்
    கன்றுடை மரையாத் துஞ்சும் சீறூர்க்
    கோள்இவண் வேண்டேம் புரவே நார்அரி
    நனைமுதிர் சாடிநறவின் வாழ்த்தித்
    துறைநனி கெழீஇக் கம்புள் ஈனும்
    தண்ணடை பெறுதலும் உரித்தே வைந்நுதி
    நெடுவேல் பாய்ந்த மார்பின்
    மடல்வன் போந்தையின் நிற்கு மோர்க்கே

  • முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்

    புறநானூறு

    முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப்
    பந்தர் வேண்டாப் பலர்தூங்கு நீழல்
    கைம்மான் வேட்டுவன் கனைதுயில் மடிந்தெனப்
    பார்வை மடப்பிணை தழீஇப் பிறிதோர்
    தீர்தொழில் தனிக்கலை திளைத்துவிளை யாட
    இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
    கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே
    பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும்
    இவ்வழங் காமையின் கல்லென ஒலித்து
    மான்அதட் பெய்த உணங்குதினை வல்சி
    கானக் கோழியொடு இதல்கவர்ந்து உண்டென
    ஆர நெருப்பின் ஆரல் நாறத்
    தடிவுஆர்ந் திட்ட முழுவள் ளூரம்
    இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குஇனிது அருந்தித்
    தங்கினை சென்மோ பாண தங்காது
    வேந்துதரு விழுக்கூழ் பரிசிலர்க்கு என்றும்
    அருகாது ஈயும் வண்மை
    உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே

    வீரை வெளியனார்

  • ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    புறநானூறு

    ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே
    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
    களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே

    பொன்முடியார்

  • களர்ப்படு கூவல் தோண்டி நாளும்

    புறநானூறு

    களர்ப்படு கூவல் தோண்டி நாளும்
    புலைத்தி கழீஇய தூவெள் அறுவை
    தாதுஎரு மறுகின் மாசுண இருந்து
    பலர்குறை செய்த மலர்த்தார் அண்ணற்கு
    ஒருவரும் இல்லை மாதோ செருவத்துச்
    சிறப்புடைச் செங்கண் புகைய வோர்
    தோல்கொண்டு மறைக்கும் சால்புடை யோனே

    ஔவையார்

  • பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்

    புறநானூறு

    பால்கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்
    செறாஅது ஓச்சிய சிறுகோல் அஞ்சியடு
    உயவொடு வருந்தும் மன்னே இனியே
    புகர்நிறங் கொண்ட களிறட்டு ஆனான்
    முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே
    உன்னிலன் என்னும் புண்ஒன்று அம்பு
    மான்உளை அன்ன குடுமித்
    தோல்மிசைக் கிடந்த புல்அண லோனே

    பொன்முடியார்

  • பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்

    புறநானூறு

    பொன்வார்ந் தன்ன புரியடங்கு நரம்பின்
    மின்நேர் பச்சை மிஞிற்றுக்குரற் சீறியாழ்
    நன்மை நிறைந்த நயவரு பாண
    சீறூர் மன்னன் சிறியிலை எ·கம்
    வேந்துஊர் யானை ஏந்துமுகத் ததுவே
    வேந்துஉடன்று எறிந்த வேலே என்னை
    சார்ந்தார் அகலம் உளம்கழிந் தன்றே
    உளங்கழி சுடர்ப்படை ஏந்தி நம் பெருவிறல்
    ஓச்சினன் துரந்த காலை மற்றவன்
    புன்தலை மடப்பிடி நாணக்
    குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத் தனவே

    கோவூர் கிழார்