Tag: புறம்

  • மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்

    புறநானூறு

    மன்ற விளவின் மனைவீழ் வெள்ளில்
    கருங்கண் எயிற்றி காதல் மகனொடு
    கான இரும்பிடிக் கன்றுதலைக் கொள்ளும்
    பெருங்குறும்பு உடுத்த வன்புல இருக்கைப்
    புலாஅல் அம்பின் போர்அருங் கடிமிளை
    வலாஅ ரோனே வாய்வாள் பண்ணன்
    உண்ணா வறுங்கடும்பு உய்தல் வேண்டின்
    இன்னே சென்மதி நீயே சென்று அவன்
    பகைப்புலம் படரா அளவை நின்
    பசிப்பகைப் பரிசில் காட்டினை கொளற்கே

    சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பி யார்

  • நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே

    புறநானூறு

    நிரப்பாது கொடுக்கும் செல்வமும் இலனே
    இல்லென மறுக்கும் சிறுமையும் இலனே
    இறையுறு விழுமம் தாங்கி அமர்அகத்து
    இரும்புசுவைக் கொண்ட விழுப்புண்நோய் தீர்ந்து
    மருந்துகொள் மரத்தின் வாள்வடு மயங்கி
    வடுவின்றி வடிந்த யாக்கையன் கொடையெதிர்ந்து
    ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்
    இன்மை தீர வேண்டின் எம்மொடு
    நீயும் வம்மோ முதுவாய் இரவல
    யாம்தன் இரக்கும் காலைத் தான்எம்
    உண்ணா மருங்குல் காட்டித் தன்ஊர்க்
    கருங்கைக் கொல்லனை இரக்கும்
    திருந்திலை நெடுவேல் வடித்திசின் எனவே

    கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார்

  • ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென

    புறநானூறு

    ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந் தென
    ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
    மலர்ப்போர் யார் என வினவலின் மலைந்தோர்
    விசிபிணி முரசமொடு மண்பல தந்த
    திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
    படை வேண்டுவழி வாள் உதவியும்
    வினை வேண்டுவழி அறிவு உதவியும்
    வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
    அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
    தோலா நல்லிசை நாலை கிழவன்
    பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
    திருந்துவேல் நாகற் கூறினர் பலரே

    வடநெடுந்தத்தனார்

  • கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து

    புறநானூறு

    கந்துமுனிந்து உயிர்க்கும் யானையடு பணைமுனிந்து
    கால்இயற் புரவி ஆலும் ஆங்கண்
    மணல்மலி முற்றம் புக்க சான்றோர்
    உண்ணார் ஆயினும் தன்னொடு சூளுற்று
    உண்மென இரக்கும் பெரும்பெயர்ச் சாத்தன்
    ஈண்டோர் இன்சா யலனே வேண்டார்
    எறிபடை மயங்கிய வெருவரு ஞாட்பின்
    கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
    நெடுமொழி மறந்த சிறுபே ராளர்
    அஞ்சி நீங்கும் காலை
    ஏம மாகத் தான்முந் துறுமே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்

    புறநானூறு

    ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்
    வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்
    பாடிப் பெற்ற பொன்னணி யானை
    தமர்எனின் யாவரும் புகுப அமர்எனின்
    திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக்
    கண்மாறு நீட்ட நணிநணி இருந்த
    குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்
    புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
    தீம்புளிக் களாவொடு துடரி முனையின்
    மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக்
    கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்
    பெரும்பெயர் ஆதி பிணங்கரில் குடநாட்டு
    எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
    பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை
    வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய
    இரும்பனங் குடையின் மிசையும்
    பெரும்புலர் வைகறைச் சீர்சா லாதே

    ஆவூர் மூலங்கிழார்

  • ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்

    புறநானூறு

    ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்
    படைத்தோன் மன்ற அப் பண்பி லாளன்
    இன்னாது அம்ம இவ் வுலகம்
    இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே

  • ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்

    புறநானூறு

    ஓரைஆயத்து ஒண்தொடி மகளிர்
    கேழல் உழுத இருஞ்சேறு கிளைப்பின்
    யாமை ஈன்ற புலவுநாறு முட்டையைத்
    தேன்நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்
    இழுமென ஒலிக்கும் புனலம் புதவின்
    பெருமா விலங்கைத் தலைவன் சீறியாழ்
    இல்லோர் சொன்மலை நல்லியக் கோடனை
    உடையை வாழி யெற் புணர்ந்த பாலே
    பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
    ஓரூர் உண்மையின் இகழ்ந்தோர் போலக்
    காணாது கழிந்த வைகல் காணா
    வழிநாட்கு இரங்கும் என் நெஞ்சம் அவன்
    கழிமென் சாயல் காண்தொறும் நினைந்தே

    புறத்திணை நன்னாகனார்

  • அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்

    புறநானூறு

    அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
    ஒருவன் ஆட்டும் புல்வாய் போல
    ஓடி உய்தலும் கூடும்மன்
    ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே

    ஓரேருழவர்

  • எந்தை வாழி ஆதனுங்க என்

    புறநானூறு

    எந்தை வாழி ஆதனுங்க என்
    நெஞ்சம் திறப்போர் நிற்காண் குவரே
    நின்யான் மறப்பின் மறக்குங் காலை
    என்உயிர் யாக்கையிற் பிரியும் பொழுதும்
    என்யான் மறப்பின் மறக்குவென் வென்வேல்
    விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர்
    திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
    உலக இடைகழி அறைவாய் நிலைஇய
    மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
    பலர்புரவு எதிர்ந்த அறத்துறை நின்னே

    கள்ளில் ஆத்திரையனார்

  • யாண்டுபல வாக நரையில ஆகுதல்

    புறநானூறு

    யாண்டுபல வாக நரையில ஆகுதல்
    யாங்கு ஆகியர் என வினவுதிர் ஆயின்
    மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்
    யான்கண் டனையர்என் இளையரும் வேந்தனும்
    அல்லவை செய்யான் காக்க அதன்தலை
    ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
    சான்றோர் பலர் யான் வாழும் ஊரே

    பிசிராந்தையர்