Tag: புறம்

  • தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்

    புறநானூறு

    தமர்தன் தப்பின் அதுநோன் றல்லும்
    பிறர்கை யறவு தான்நா ணுதலும்
    படைப்பழி தாரா மைந்தினன் ஆகலும்
    வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்
    நும்மோர்க்குத் தகுவன அல்ல எம்மோன்
    சிலைசெல மலர்ந்த மார்பின் கொலைவேல்
    கோடல் கண்ணிக் குறவர் பெருமகன்
    ஆடு மழை தவிர்க்கும் பயங்கெழு மீமிசை
    எற்படு பொழுதின் இனம்தலை மயங்கிக்
    கட்சி காணாக் கடமான் நல்லேறு
    மடமான் நாகுபிணை பயிரின் விடர்முழை
    இரும்புலிப் புகர்ப்போத்து ஓர்க்கும்
    பெருங்கல் நாடன்-எம் ஏறைக்குத் தகுமே

    குறமகள் இளவெயினி

  • ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்

    புறநானூறு

    ஒன்றுநன் குடைய பிறர் குன்றம் என்றும்
    இரண்டுநன் குடைத்தே கொண்பெருங் கானம்
    நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
    தொடுத்துணக் கிடப்பினும் கிடக்கும் அதான்று
    நிறையருந் தானை வேந்தரைத்
    திறைகொண்டு பெயர்க்குஞ் செம்மலும் உடைத்தே

    மோசிகீரனார்

  • வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ

    புறநானூறு

    வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ
    உணர்வோர் யார் என் இடும்பை தீர்க்கஎனக்
    கிளக்கும் பாண கேள் இனி நயத்தின்
    பாழ்ஊர் நெருஞ்சிப் பசலை வான்பூ
    ஏர்தரு சுடரின் எதிர்கொண்டு ஆஅங்கு
    இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
    கொண்பெருங்காலத்துக் கிழவன்
    தண்தார் அகலம் நோக்கின் மலர்ந்தே

    மோசிகீரனார்

  • திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்

    புறநானூறு

    திரைபொரு முந்நீர்க் கரைநணிச் செலினும்
    அறியுநர்க் காணின் வேட்கை நீக்கும்
    சின்னீர் வினவுவர் மாந்தர் அதுபோல்
    அரசர் உழைய ராகவும் புரைதபு
    வள்ளியோர்ப் படர்குவர் புலவர் அதனால்
    யானும்பெற்றது ஊதியம் பேறியாது என்னேன்
    உற்றனென் ஆதலின் உள்ளிவந் தனனே
    ஈயென இரத்தலோ அரிதே நீ அது
    நல்கினும் நல்காய் ஆயினும் வெல்போர்
    எறிபடைக்கு ஓடா ஆண்மை அறுவைத்
    தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
    தண்பல இழிதரும் அருவி நின்
    கொண்டுபெருங்கானம் பாடல் எனக்கு எளிதே

    மோசிகீரனார்

  • மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்

    புறநானூறு

    மழையணி குன்றத்துக் கிழவன் நாளும்
    இழையணி யானை இரப்போர்க்கு ஈயும்
    சுடர்விடு பசும்பூண் சூர்ப்பு அமை முன்கை
    அடுபோர் ஆனா ஆதன் ஓரி
    மாரி வண்கொடை காணிய நன்றும்
    சென்றது மன் எம் கண்ணுளங் கடும்பே
    பனிநீர்ப் பூவா மணிமிடை குவளை
    வால்நார்த் தொடுத்த கண்ணியும் கலனும்
    யானை இனத்தொடு பெற்றனர் நீங்கிப்
    பசியார் ஆகல் மாறுகொல் விசிபிணிக்
    கூடுகொள் இன்னியம் கறங்க
    ஆடலும் ஒல்லார் தம் பாடலும் மறந்தே

    வண்பரணர்

  • வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி

    புறநானூறு

    வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
    பேழ்வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇப்
    புழல்தலை புகர்க்கலை உருட்டி உரல்தலைக்
    கேழற் பன்றி வீழ அயலது
    ஆழற் புற்றத்து உடும்பில் செற்றும்
    வல்வில் வேட்டம் வலம்படுத் திருந்தோன்
    புகழ்சால் சிறப்பின் அம்புமிகத் திளைக்கும்
    கொலைவன் யார்கொலோ கொலைவன் மற்று இவன்
    விலைவன் போலான் வெறுக்கைநன்கு உடையன்
    ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின்
    சாரல் அருவிப் பயமலைக் கிழவன்
    ஓரி கொல்லோ அல்லன் கொல்லோ
    பாடுவல் விறலி ஓர் வண்ணம் நீரும்
    மண்முழா அமைமின் பண்யாழ் நிறுமின்
    கண்விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்
    எல்லரி தொடுமின் ஆகுளி தொடுமின்
    பதலை ஒருகண் பையென இயக்குமின்
    மதலை மாக்கோல் கைவலம் தமின் என்று
    இறைவன் ஆகலின் சொல்லுபு குறுகி
    மூவேழ் துறையும் ழுறையுளிக் கழிப்பிக்
    கோவெனப் பெயரிய காலை ஆங்கு அது
    தன்பெயர் ஆகலின் நாணி மற்று யாம்
    நாட்டிடன் நாட்டிடன் வருதும் ஈங்கு ஓர்
    வேட்டுவர் இல்லை நின் ஒப் போர் என
    வேட்டது மொழியவும் விடாஅன் வேட்டத்தில்
    தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு
    ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கித்
    தன்மலைப் பிறந்த தாவில் நன்பொன்
    பன்மணிக் கு வையொடும் விரைஇக் கொண்ம் எனச்
    சுரத்துஇடை நல்கி யோனே விடர்ச் சிமை
    ஓங்குஇருங் கொல்லிப் பொருநன்
    ஓம்பா ஈகை விறல்வெய் யோனே

    வண்பரணர்